Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

டில்லியில் சாமியாரைத் தாக்கவிட்டு கோயிலில் கொள்ளை

Published on சனி, 14 மார்ச், 2009 3/14/2009 02:11:00 AM // , , , , , ,

டில்லியில் உள்ள மெஹ்ராலி பகுதியில் வியாழக் கிழமை இரவு சாமியாரைத் தாக்கிவிட்டு, கோயிலில் இருந்த சாமி சிலைகளின் தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப் பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர்.

வெள்ளிக் கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மெஹ்ராலி பகுதியில் உள்ள மண்டி கிராமத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

தங்களுடைய நண்பனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கோயிலைத் திறக்குமாறு கொள்ளைக் கும்பல் சுபாஷ் கிரி மஹராஜ் என்ற சாமியாரிடம் கோரினர். அவர் கோயிலைத் திறந்ததும் அவரைக் கத்தியால் தாக்கிவிட்டு, சிலைகளுக்கு அணிவிக்கப் பட்டிருந்த ஆபரணங்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.

கையில் காயத்துடன் இருந்த சாமியாரை அந்தக் கிராமத்தவர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!