Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இந்திய அரசு வாங்கும் அதிநவீன விமானங்கள்

அமெரிக்க அதிபரின் ஏர்போர்ஸ் ஒன் விமானத்துக்கு இணையான வசதிகளைக் கொண்ட அதிநவீன விமானங்கள் மூன்று இந்திய அரசின் கேட்பின்பேரில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஏவுகணைகளும் தகர்க்க முடியாத தொழில்நுட்பத்தில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன,

இந்த அதி நவீன விமானத்தில் 48 பேர் வரை பயணம் செய்ய முடியும். நிற்காமல் 6 ஆயிரம் மைல் பறக்கக் கூடிய இந்த விமானத்தில் பறந்தபடியே உலகின் எந்த பகுதியில் இருப்பவருடனும் பேச முடியும். அவசர காலத்துக்கு ஏற்ப இயங்கும் வகையில் இதன் எந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தமாத இறுதியில் இருந்து இந்த விமானம் பயன்பட்டுக்கு வர உள்ள இவ்விமான சேவையை குடியரசுத்தலைவர் பிரதிபா பட்டீல் தொடங்கி வைக்கிறார்.

மூன்று விமானங்களில் குடியரசுத்தலைவருக்கு ஒன்று, பிரதமருக்கு ஒன்று போக மூன்றாவது விமானம் வெளிநாட்டுத்தலைவர்கள் வருகையின் போதும் பயன்படுத்தப்படுமாம்.

சந்தையில் புதுசு: 'ஆடி' நிறுவனத்தின் Q5 கார்



ஜெர்மானிய சொகுசு கார் தயாரிப்பாளர்களான 'ஆடி' நிறுவனம் Q5 என்கிற புதிய மாடல் காரை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இந்தியச்சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இப்போது இந்திய சந்தையில் கிடைத்துக்கொண்டிருக்கும் ஆடியின் ஒரே ஸ்போர்ட்ஸ் மாடல் கார் Q7 தான். மக்கள் அதைவிட சிறிய ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வேண்டும் என்று விரும்பியதால், Q5 மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அந்நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் 30,000 முதல் 50,000 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ.19,50,000 முதல் ரூ.32,50,000 வரையுள்ள விலையில் இக்கார்கள் கிடைக்கின்றன. அங்கு நான்கு மாடல்களில் இக்கார்கள் விற்பனையில் உள்ளன. இந்தியாவில் விற்பனைக்கு இப்போதைக்கு இரண்டு மாடல் Q5 களே அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

ஜெர்மனியில் இங்கல்ஸ்டாட்டில் இருக்கும் 'ஆடி'தொழிற்சாலையில் முற்றிலுமாக தயாரிக்கப்பட்டே இக்கார்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தானில் மீண்டும் இராணுவப் புரட்சிக்குத் திட்டம்?

பாகிஸ்தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிப் அலி சர்தாரி மீது அந்நாட்டின் இராணுவத் தளபதி அஷ்ஃபாக் பர்வேஸ் கியானி கடும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். நாட்டின் சட்டம் ஒழுங்கை மார்ச் 16க்குள் நிலைநாட்டும்படி அதிபருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. மார்ச் 16ல் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆதரவாளர்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்கின்றனர்.

கியானி அண்மையில் அமெரிக்கா சென்று வந்ததும், வந்தவுடன் மற்ற இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதையும் அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். பாகிஸ்தானில் மீண்டும் இராணுவ ஆட்சி ஏற்படும் என்ற ஐயத்தை மேற்குலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முஷாரஃப் இந்தியா வருகை: சந்திக்க தலைவர்கள் மறுப்பு

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் திட்டமிட்டிருந்தபடி மன்மோகன்சிங், சோனியாகாந்தி, குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டில் ஆகியோரைச் சந்திக்க இயலவில்லை. சந்திப்பு குறித்த அவருடைய வேண்டுகோளை இம்மூன்று தலைவர்களும் நிராகரித்துள்ளனர்.

மேலும் டெல்லியில் நான்கு இடங்களில் சொற்பொழிவு நிகழ்த்த அவர் அனுமதி கோரியிருந்த போதும் இரண்டு இடங்களில் பேசுவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூத்த அமைச்சர்கள் யாரும் அவரை வரவேற்கச் செல்லாமல் இணை செயலர் தகுதியில் உள்ள அதிகாரி ஒருவரே அவரை விமானநிலையத்தில் வரவேற்றார். இந்திய அரசின் முக்கிய விருந்தினராக அவர் நடத்தப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!