Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

முஷாரஃப் இந்தியா வருகை: சந்திக்க தலைவர்கள் மறுப்பு

Published on திங்கள், 9 மார்ச், 2009 3/09/2009 10:14:00 PM // , , , , , ,

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் திட்டமிட்டிருந்தபடி மன்மோகன்சிங், சோனியாகாந்தி, குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டில் ஆகியோரைச் சந்திக்க இயலவில்லை. சந்திப்பு குறித்த அவருடைய வேண்டுகோளை இம்மூன்று தலைவர்களும் நிராகரித்துள்ளனர்.

மேலும் டெல்லியில் நான்கு இடங்களில் சொற்பொழிவு நிகழ்த்த அவர் அனுமதி கோரியிருந்த போதும் இரண்டு இடங்களில் பேசுவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூத்த அமைச்சர்கள் யாரும் அவரை வரவேற்கச் செல்லாமல் இணை செயலர் தகுதியில் உள்ள அதிகாரி ஒருவரே அவரை விமானநிலையத்தில் வரவேற்றார். இந்திய அரசின் முக்கிய விருந்தினராக அவர் நடத்தப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!