Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

சென்னை விமானநிலையத்தில் இரண்டாவது ஓடுதளம் அமைக்கும்

Published on: வியாழன், 5 மார்ச், 2009 // , , , , , , ,

சென்னை விமான நிலையத்தை 1,808 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. அதிநவீன வசதிகள் கொண்ட புதிய உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனைய விரிவாக்கம், புதிய ஓடுபாதை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.இந்த விரிவாக்க திட்டங்களுக்காக தமிழக அரசு இலவசமாக தருவதாக அறிவித்த 1,059 ஏக்கர் நிலத்தில், தற்போது 120 ஏக்கர் நிலம் விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது....

சிறையில் தோண்டத் தோண்ட

புதுவை மாநிலம் காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இதில் உள்ள 276 கைதிகளில் 5 பேர் பெண்கள். 79 பேர் தண்டனைக் கைதிகளாகவும், மற்றவர்கள் விசாரணைக் கைதிகளாவும் உள்ளனர்.நேற்று நடைபெற்ற ஆய்வில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியொன்றில் கழிவறைத் தொட்டி அருகில் ஒரு வித்தியாசமான பொருள் புதைந்த நிலையில் இருந்தது தெரிய வந்து சோதனை செய்த போது அங்கு செல்பேசியொன்று கைப்பற்றப்பட்டது.இதையடுத்து அந்த பகுதி முழுவதும் தீவிர...

பாஜக பிரமுகரின் மிரட்டலால் தூக்குப்போட்டு

கேசவ் கிசான் ஜக்தாப் என்பது அவர் பெயர். அவருடைய மகன் குணாலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்களுள் ஒருவரான காசிநாத் கோகட்டே என்பவரின் மகளுடன் காதல் தொடர்பு இருந்தது. காதலர்கள் இருவரும் வீட்டைவிட்டு ஓடிவிட, பாஜக தலைவர் காசிநாத்தின் ஆதரவாளர்கள் கேசவ் வீட்டுக்குச் சென்று தகராறு செய்து, பின்விளைவுகள் குறித்து கடுமையாக எச்சரித்ததாகவும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இதனால் பயந்த 45 வயது கேசவ் கிசான் கடந்த ஞாயிறன்று தூக்குப்போட்டு...

இலங்கை வீரர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக, இந்தியாவை சம்பந்தபடுத்தி வரும் செய்திகளுக்கு, பாக்.

Published on: //

பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக இந்தியாவை சம்பந்தபடுத்தி வந்த செய்திகளுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக, உள்துறை அமைச்சின் தலைமை அதிகாரி, ரகுமான் மாலிக் கூறுகையில், இந்தியாவை சம்பந்தபடுத்தி வரும் செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார். ...

'Slum Dog' சிறு நாயகன் வீடு இடிப்பு.

ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படத்தில் சிறுவயது சலீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் அஸ்ஹருத்தீன் முஹம்மத் இஸ்மாயில். பாந்த்ரா கரீப் நகரின் சேரியில் ஒரு குடிசையில் வசித்து வந்தான். அனுமதிபெறாமல் கட்டிய குடிசை என்ற வகையில் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க பம்பாய் மாநகராட்சி இருவாரங்களுக்கு முன் இடித்துத் தள்ளிய 200 குடிசைகளுள் அஸ்ஹருத்தீன் குடிசையும் ஒன்று.அதன்பிறகு அவர்கள் தார்ப்பாலினால் தற்காலிக கூடாரம் அடித்து...

புதிய தலைமை தேர்தல் ஆணையர் மீது புதிய

நாட்டின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக நவீன்சாவ்லா ஏப்ரல் 20ம் தேதி பதவியேற்கிறார். இது தொடர்பாக குடியரசுத்தலைவர் அளித்த ஒப்புதல், சட்ட விவகாரங்கள் துறை செயலருக்கு அனுப்பப்படும். அதன்பின், இதை அரசிதழில் வெளியிட சட்ட அமைச்சகம் ஏற்பாடு செய்யும். இதன் மூலம் நடக்கவிருக்கும் இரண்டாம் கட்ட தேர்தலிலிருந்து (ஏப்ரல் 20 முதல்) இவர் பொறுப்பேற்பார்.இதற்கிடையே, நவீன் சாவ்லாவை தலைமை தேர்தல் ஆணையராக நியமித்தது துரதிருஷ்டமானது என, பாரதிய...

பாகிஸ்தானின் வங்கதேசம் சுற்றுப்பயணம் தள்ளிவைப்பு ?

Published on: //

பாகிஸ்தானில் சில தினங்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் வங்கதேச சுற்றுப்பயனம் கேள்விகுறியாக உள்ளது. இது குறித்து அரசு செய்தியாளர் கூறுகையில், பாகிஸ்தானின் சுற்றுபயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகள் முடிந்து விட்ட நிலையில், சுற்றுபயணம் தொடர்வது சம்பந்தமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அனைத்துலக கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக குறிப்பிட்டார்.இதற்கிடையே, பாக் மற்றும் இந்தியா நாடுகளில் 2011 ஆம்...

இலங்கைத் தமிழருக்காக உண்ணாவிரதம் -ஜெயலலிதா

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தாத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மார்ச் 10ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அதிமுக தலைவி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு நமது...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!