Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பாஜக பிரமுகரின் மிரட்டலால் தூக்குப்போட்டு தற்கொலை

Published on வியாழன், 5 மார்ச், 2009 3/05/2009 09:24:00 PM // , , , , , ,

கேசவ் கிசான் ஜக்தாப் என்பது அவர் பெயர். அவருடைய மகன் குணாலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்களுள் ஒருவரான காசிநாத் கோகட்டே என்பவரின் மகளுடன் காதல் தொடர்பு இருந்தது. காதலர்கள் இருவரும் வீட்டைவிட்டு ஓடிவிட, பாஜக தலைவர் காசிநாத்தின் ஆதரவாளர்கள் கேசவ் வீட்டுக்குச் சென்று தகராறு செய்து, பின்விளைவுகள் குறித்து கடுமையாக எச்சரித்ததாகவும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பயந்த 45 வயது கேசவ் கிசான் கடந்த ஞாயிறன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவர் மனைவி சங்கீதா அளித்த புகாரின் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். என்றாலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இச்சம்பவம் அவுரங்காபாத்தில் நிகழ்ந்துள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!