Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

சிறையில் தோண்டத் தோண்ட

Published on வியாழன், 5 மார்ச், 2009 3/05/2009 09:36:00 PM // , , , , , , ,

புதுவை மாநிலம் காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இதில் உள்ள 276 கைதிகளில் 5 பேர் பெண்கள். 79 பேர் தண்டனைக் கைதிகளாகவும், மற்றவர்கள் விசாரணைக் கைதிகளாவும் உள்ளனர்.

நேற்று நடைபெற்ற ஆய்வில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியொன்றில் கழிவறைத் தொட்டி அருகில் ஒரு வித்தியாசமான பொருள் புதைந்த நிலையில் இருந்தது தெரிய வந்து சோதனை செய்த போது அங்கு செல்பேசியொன்று கைப்பற்றப்பட்டது.


இதையடுத்து அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கழிவறைத் தொட்டி அருகில் தோண்டத் தோண்ட செல்பேசிகளாக வந்தன. ஒன்பது செல்பேசிகள், 18 மின்கலன்கள், மூன்று மின்னிணைப்புக்கருவிகள், ஒரு எண் அட்டை கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு பணிகள், கண்காணிப்பு ஒளிப்படக்கருவி செல்பேசி மின்னணுத்தடைக் கருவி உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ளும் திட்டத்திற்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!