Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

சென்னை விமானநிலையத்தில் இரண்டாவது ஓடுதளம் அமைக்கும்

Published on வியாழன், 5 மார்ச், 2009 3/05/2009 09:48:00 PM // , , , , , , ,

சென்னை விமான நிலையத்தை 1,808 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. அதிநவீன வசதிகள் கொண்ட புதிய உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனைய விரிவாக்கம், புதிய ஓடுபாதை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.


இந்த விரிவாக்க திட்டங்களுக்காக தமிழக அரசு இலவசமாக தருவதாக அறிவித்த 1,059 ஏக்கர் நிலத்தில், தற்போது 120 ஏக்கர் நிலம் விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்த இடத்தில், அடையாறு ஆற்றின் மேல் இரண்டாவது ஓடுதளம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆற்றின் மேற்பகுதியில் நவீன தொழில் நுட்பத்துடன் இரண்டாவது ஓடுதளம் அமைகிறது. தற்போது, கெருகம்பாக்கம் பகுதியில் ஓடுதளம் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பள்ளமான இடங்களில் மண்ணை கொட்டி சமப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!