Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

சிறுநீரக தானம் உடல்நலத்தைப் பாதிக்காது.

சிறுநீரக தானம் உடல்நலனைப் பாதிக்காது என்று மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு சிறுநீரகத்தை தானமளித்தவர்களும் இரு சிறுநீரகம் உடைய மற்றவர்களைப் போலவே வாழ்வைத் தொடரலாம் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.சிறுநீரகக்கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மற்றும் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் சிறுநீரகதானத்தின் காரணமாக அதிகப்படுவதில்லை என்றும், வயது, பாலினம், பரம்பரை உள்ளிட்ட நோய்வாய்க்காரணிகளில் சிறுநீரகத்தானம் செய்தவர், செய்யாதவர் என்ற பாகுபாடு பாரிய வேறுபாட்டை ஏற்படுத்துவதில்லை...

நாளை கூடுகிறது தி மு செயற்குழு.

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளநிலையில் தி மு க செயற்குழு நாளை கூடுகிறது. உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.இந் நிலையில்...

கல்யாணத்தை நிறுத்திய கலெக்டர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது கடம்பர அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெண்ணிலா. இவருக்கு 16 வயது. திப்பம்பட்டி அரசினர் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இவருக்கும், பேதாதம்பட்டியைச் சேர்ந்த துரைவளவன் என்பவருக்கும் நேற்று பேதாதம்பட்டி மணமகன் வீட்டில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.இது குறித்து மாவட்ட கலெக்டர் அமுதாவுக்கு தகவல் கிடைத்து. அரசின் சட்டவிதிகளுட்பட்டு மணப்பெண்ணின் வயது ஆகவில்லை என்ற குற்றச்சாட்டினையடுத்து மாவட்ட கலெக்டர் அமுதா,...

தலைமை தேர்தல் ஆணையரின் பரிந்துரை

குடியரசுத் தலைவருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தை மத்திய அரசு இன்று நிராகரித்தது.இந்திய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை நீக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால் சாமி குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு பரிந்துரைக் கடிதம் எழுதியிருந்தார். தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு மாதங்களும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதே அளவு நாட்களும் மீதம் உள்ள நிலையில் கோபால்சாமியின் இக்கடிதம் அரசியல்...

பாண்டிச்சேரியிலும் கல்லூரிகள்

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், இந்திய அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு அமைப்புகளும் போராடி வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தவிர்க்கும் நோக்கில் நேற்று தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் விடுதிகள் அனைத்தும் காலவரையறையின்றி மூட அரசு உத்தரவிட்டது.தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் இன்று முதல் தனியார்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!