Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

பாண்டிச்சேரியிலும் கல்லூரிகள்

Published on திங்கள், 2 பிப்ரவரி, 2009 2/02/2009 03:29:00 PM // , , , , ,

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், இந்திய அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு அமைப்புகளும் போராடி வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தவிர்க்கும் நோக்கில் நேற்று தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் விடுதிகள் அனைத்தும் காலவரையறையின்றி மூட அரசு உத்தரவிட்டது.


தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் இன்று முதல் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளை காலவரையறையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகவலை புதுச்சேரி கல்லூரி கல்வி இயக்குநர் ஜெயந்த குமார் தெரிவித்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருப்போரையும் விடுதியை விட்டுப் போகச் சொல்லப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!