Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

நாளை கூடுகிறது தி மு க செயற்குழு.

Published on திங்கள், 2 பிப்ரவரி, 2009 2/02/2009 08:21:00 PM // ,

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளநிலையில் தி மு க செயற்குழு நாளை கூடுகிறது.

உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் நாளை கூடும் திமுக செயற்குழுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியும் பங்கேற்கிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.ஓய்வு கட்டாயம் தேவை என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், நாளைய கூட்டத்திற்கு அவர் தலைமை வகிப்பார் என தெரிகிறது.

நாளை இலங்கை விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என ஊடக உலகில் எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!