Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தலைமை தேர்தல் ஆணையரின் பரிந்துரை நிராகரிப்பு

Published on திங்கள், 2 பிப்ரவரி, 2009 2/02/2009 04:02:00 PM // , , ,

குடியரசுத் தலைவருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தை மத்திய அரசு இன்று நிராகரித்தது.

இந்திய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை நீக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால் சாமி குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு பரிந்துரைக் கடிதம் எழுதியிருந்தார். தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு மாதங்களும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதே அளவு நாட்களும் மீதம் உள்ள நிலையில் கோபால்சாமியின் இக்கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் இப்பரிந்துரைக் கடிதத்தை அரசு இன்று நிராகரித்துள்ளது. இதன் மூலம் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா பதவியேற்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இப்பிரச்சனை தொடர்பாக கருத்து கூறிய சட்ட அமைச்சர் பரத்வாஜ், தலைமைத் தேர்தல் ஆணையர் தொடர்பாக அரசின் கொள்கை இருப்பதாகவும், அந்த கொள்கை தொடரும் என்றும் கூறினார். இந்த சர்ச்சை துரதிருஷ்டவசமானது என்று கூறிய அவர் சாவ்லாவின் பணியை இது பாதிக்காது என்றும் கூறினார். கோபால் சாமி தேர்தல் ஆணையாளராகப் பணிபுரிய வேண்டும். அரசியல் கட்சித் தலைவர் போன்றல்ல என்றும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையராக டி.என் சேஷன் இருந்தபோது ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து ஆணையம் சீரமைக்கப்பட்டது. தேர்தல் ஆணையராக ஒருவர் என்ற நிலை மாறி மூன்று தேர்தல் ஆணையர்களும் அவர்களில் ஒருவர் தலைமைத் தேர்தல் ஆணையர் என்றும் மாற்றியமைக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!