Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 13, 2025

கல்யாணத்தை நிறுத்திய கலெக்டர்.

Published on திங்கள், 2 பிப்ரவரி, 2009 2/02/2009 08:17:00 PM // , ,

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது கடம்பர அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெண்ணிலா. இவருக்கு 16 வயது. திப்பம்பட்டி அரசினர் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கும், பேதாதம்பட்டியைச் சேர்ந்த துரைவளவன் என்பவருக்கும் நேற்று பேதாதம்பட்டி மணமகன் வீட்டில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் அமுதாவுக்கு தகவல் கிடைத்து. அரசின் சட்டவிதிகளுட்பட்டு மணப்பெண்ணின் வயது ஆகவில்லை என்ற குற்றச்சாட்டினை
யடுத்து மாவட்ட கலெக்டர் அமுதா, இளம் பெண் வெண்ணிலாவின் திருமணத்தை தடுத்து நிறுத்த அரூர் டிஎஸ்பி மோகனுக்கு உத்தரவிட்டார்.

இதன் பேரில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரிடம் பேசிய போலீசார் வெண்ணிலாவின் பால்ய திருமணம் சட்ட விரோதமானது எனக் கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!