Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 08, 2025

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை

Published on: வியாழன், 15 ஜனவரி, 2009 // , , ,

பாகிஸ்தான் செல்லவிருந்த இந்திய கிரிக்கெட் அணி மும்பை தாக்குதல் சம்பவத்தை அடுத்து அங்கு நடைபெறவிருந்த போட்டிகள் ரத்து செய்யப் பட்டன. அதனைத் தொடர்ந்து இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு இன்று அதற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது.வரும் 24ஆம் தேதி இந்திய அணி கொழும்பு செல்கிறது.  28 மற்றும் 30 ஆம் தேதி டம்போலாவில் இரு ஒரு நாள் போட்டிகள் நடக்கின்றன. மூன்றாவது போட்டி அடுத்தமாதம் 2ஆம்...

காஸா - பலி எண்ணிக்கை 1100ஐ

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த 20 நாட்களாக வான், தரை மற்றும் கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. காஸா நகரின் உள்ளே பாலஸ்தீன போராளிக் குழுக்களுக்கும் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் இடையே கடுமையான சன்டை நடந்து வருகிறது.இதுவரை 1100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4700க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 311 குழந்தைகள் மற்றும் 97 பெண்களும் அடங்குவர்.இன்று காலை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உதவி மையத்தின்...

நீதிபதிகள் சம்பளம் மூன்று மடங்கு

Published on: //

இந்திய நீதிபதிகளின் சம்பளங்களை மூன்று மடங்காக உயர்த்துவதற்கு இந்தி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த மாதம் இதற்கான சட்ட முன்வரைவை மத்திய சட்ட அமைச்சர் பாராளுமன்றத்தில் முன்வைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் அந்துலே பிரச்சனையால் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட வில்லை. பிறகு மத்திய அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்தது. அதற்கு ஜனாதிபதி கடந்த வாரம் ஒப்புதல் அளித்ததாக சட்டத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் இன்று கூறினார்.நீதிபதிகளின்...

மும்பை தாக்குதல் விசாரணை - பாகிஸ்தானில்

மும்பையில் நவம்பர் 26ஆம் தேதியன்று நடத்தப்பட் தீவிரவாத தாக்குதல் குறித்த விசாரணையை பாகிஸ்தானில் நடத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தானிய அரசு மறுத்து வருகிறது. இந்திய அரசு அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் பாகிஸ்தானிய அரசுக்கும் தீவிரவாதிகளின் பாகிஸ்தானிய தொடர்பு குறித்த ஆதாரங்களை அளித்தது. இவற்றை ஆதாரங்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் இவை வெறும் தகவல்கள்...

துபாயில் கொண்டாட்டம் நிறுத்தம்.

துபாயில் ஆண்டுதோறும் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நடக்கும். இதன் வண்ண மயமான துவக்க விழா ஆட்சியாளர்களால் மிகக் கோலாகலமாக நடத்தப்படும்.இந்த ஆண்டு ஷாப்பிங் திருவிழா இன்று துவங்குகிறது. ஆனால் இஸ்ரேல் நடத்தும் கொலைவெறித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர் களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றைய துவக்கவிழா கொண்டாட்டங்களை ரத்துச் செய்து துபாயின் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகங்களின் பிரதமரும் துணை ஜனாதிபதியுமான ஷெய்க் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!