Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை பயணம்

Published on: வியாழன், 15 ஜனவரி, 2009 // , , ,
பாகிஸ்தான் செல்லவிருந்த இந்திய கிரிக்கெட் அணி மும்பை தாக்குதல் சம்பவத்தை அடுத்து அங்கு நடைபெறவிருந்த போட்டிகள் ரத்து செய்யப் பட்டன. அதனைத் தொடர்ந்து இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு இன்று அதற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது.

வரும் 24ஆம் தேதி இந்திய அணி கொழும்பு செல்கிறது.  28 மற்றும் 30 ஆம் தேதி டம்போலாவில் இரு ஒரு நாள் போட்டிகள் நடக்கின்றன. மூன்றாவது போட்டி அடுத்தமாதம் 2ஆம் தேதி நடைபெறும். 4 மற்றும் 5ஆவது போட்டிகள் ஓரிரு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நடைபெறும். அதன் பின்னர் T-20 எனப்படும் 20 ஓவர் கொண்ட போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கைப் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. மும்பை தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்ததையும், தென் ஆப்பிரிக்காவில் முன்பு இருந்த நிற வெறி அரசுக்கெதிராக அந்த அணி சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்ததையும் சுட்டிக் காட்டிய பா.ம.க. தலைவர் இராமதாஸ், தன் நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் இலங்கை அரசைக் கண்டிக்கும் விதமாய் இலங்கையுடனான கிரிக்கெட் உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக ஸ்ரீனிவாசன், தேர்வுக் குழுத் தலைவராக ஸ்ரீகாந்த் போன்ற தமிழர்கள் பொறுப்பில் இருந்தும் தமிழர்கள் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் இந்திய அணியை இலங்கை அனுப்ப முடிவு செய்ததைச் சுட்டிக் காட்டினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இந்திய அணி இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா தலையிட வேண்டும் என்று கோரி தொடர் உண்ணா நிலை மேற்கொண்டு வருகிறார் என்பது நினைவு கூரத்தக்கது.

காஸா - பலி எண்ணிக்கை 1100ஐ தாண்டியது

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த 20 நாட்களாக வான், தரை மற்றும் கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. காஸா நகரின் உள்ளே பாலஸ்தீன போராளிக் குழுக்களுக்கும் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் இடையே கடுமையான சன்டை நடந்து வருகி
றது.

இதுவரை 1100க்கும் அதிகமான 
பாலஸ்தீனியர்கள் 
கொல்லப்பட்டுள்ளனர். 4700க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 311 குழந்தைகள் மற்றும் 97 பெண்களும் அடங்குவர்.

இன்று காலை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உதவி மையத்தின் தலைமை அலுவலகம் குறி வைத்து தாக்கப் பட்டுள்ளது. சன்டை நிறுத்தம் தொடர்பாக 
பேச்சு வார்த்தை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவிவில் சென்றிருக்கும் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்செயலுக்கு பான் கி மூன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். 

இன்று காலை காஸா நகரின் அல்குத்ஸ் மருத்துவமனை மீதும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது காஸா நகரின் மைய பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் பாலஸ்தீன் குழுக்களுக்கும் இடையே கடுமையான சன்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய தரப்பின் சேதம் குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. எனினும் நேற்றிலிருந்து இதுவரை சுமார் 33 இராணுவத்தினர் காயமுற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஹமாஸ் இயக்கத்தின் தகவல்படி 34 இராணுவத்தினர் கொல்லப் பட்டுள்ளனர். 96 பேர் காயமுற்றுள்ளனர்.

காஸாவிலிருந்து அருகிலுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீதான ராக்கெட் தாக்குதல் தொடர்ந்து கொண்டுள்ளது.

நீதிபதிகள் சம்பளம் மூன்று மடங்கு உயர்வு

Published on: //
இந்திய நீதிபதிகளின் சம்பளங்களை மூன்று மடங்காக உயர்த்துவதற்கு இந்தி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த மாதம் இதற்கான சட்ட முன்வரைவை மத்திய சட்ட அமைச்சர் பாராளுமன்றத்தில் முன்வைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் அந்துலே பிரச்சனையால் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட வில்லை. பிறகு மத்திய அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்தது. அதற்கு ஜனாதிபதி கடந்த வாரம் ஒப்புதல் அளித்ததாக சட்டத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் இன்று கூறினார்.

நீதிபதிகளின் உயர்த்தப்பட்ட சம்பள விவரம் வருமாறு: அடைப்புக்குறிக்குள் இருப்பவை பழைய சம்பள விகிதம்.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி : ரூ. 1 இலட்சம் (33 ஆயிரம்)
உச்சநீதி மன்ற நீதிபதிகள் : ரூ. 90 ஆயிரம் (30 ஆயிரம்)
உயர் நீதி மன்ற தலைமை நீதிபதிகள் : ரூ. 90 ஆயிரம் (30 ஆயிரம்)
உயர் நீதி மன்ற நீதிபதிகள் : ரூ. 80 ஆயிரம் (26 ஆயிரம்)

மும்பை தாக்குதல் விசாரணை - பாகிஸ்தானில் நடத்தலாம்

மும்பையில் நவம்பர் 26ஆம் தேதியன்று நடத்தப்பட் தீவிரவாத தாக்குதல் குறித்த விசாரணையை பாகிஸ்தானில் நடத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. 

மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தானிய அரசு மறுத்து வருகிறது. இந்திய அரசு அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் பாகிஸ்தானிய அரசுக்கும் தீவிரவாதிகளின் பாகிஸ்தானிய தொடர்பு குறித்த ஆதாரங்களை அளித்தது. இவற்றை ஆதாரங்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் இவை வெறும் தகவல்கள் மட்டுமே என்றும் பாகிஸ்தான் கூறி வருகிறது.

மும்பை தீவிரவாத தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த அமெரிக்க தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியது. பின்னர் இது குறித்த விசாரணை பாகிஸ்தானில் நடத்தலாம் என்று கருத்து கூறியது. ஆனால் விசாரணை இந்தியாவில்தான் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா கூறி வந்தது.

"இந்தியாவில் நடந்த குற்றங்கள் குறித்து இந்தியாவில்தான் நீதி விசாரணை நடத்த வேண்டும். சில காரணங்களால் இது முடியாமல் போனால் பாகிஸ்தானில் முறையான விசாரணை நடத்த முடியும் என்றால் பாகிஸ்தானில் நடத்தலாம்" என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி கூறியுள்ளார்.

முன்னதாக இந்தியா அளித்த ஆதாரங்களுக்கு பாகிஸ்தான் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

துபாயில் கொண்டாட்டம் நிறுத்தம்.

துபாயில் ஆண்டுதோறும் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நடக்கும். இதன் வண்ண மயமான துவக்க விழா ஆட்சியாளர்களால் மிகக் கோலாகலமாக நடத்தப்படும்.

இந்த ஆண்டு ஷாப்பிங் திருவிழா இன்று துவங்குகிறது. ஆனால் இஸ்ரேல் நடத்தும் கொலைவெறித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர் களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றைய துவக்கவிழா கொண்டாட்டங்களை ரத்துச் செய்து துபாயின் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகங்களின் பிரதமரும் துணை ஜனாதிபதியுமான ஷெய்க் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் உத்தரவிட்டுளார்.

இதே காரணத்துக்காகப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் துபாயில் ரத்துச் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!