Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

காஸா - பலி எண்ணிக்கை 1100ஐ தாண்டியது

Published on வியாழன், 15 ஜனவரி, 2009 1/15/2009 06:12:00 PM // , ,

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த 20 நாட்களாக வான், தரை மற்றும் கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. காஸா நகரின் உள்ளே பாலஸ்தீன போராளிக் குழுக்களுக்கும் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் இடையே கடுமையான சன்டை நடந்து வருகி
றது.

இதுவரை 1100க்கும் அதிகமான 
பாலஸ்தீனியர்கள் 
கொல்லப்பட்டுள்ளனர். 4700க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 311 குழந்தைகள் மற்றும் 97 பெண்களும் அடங்குவர்.

இன்று காலை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உதவி மையத்தின் தலைமை அலுவலகம் குறி வைத்து தாக்கப் பட்டுள்ளது. சன்டை நிறுத்தம் தொடர்பாக 
பேச்சு வார்த்தை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவிவில் சென்றிருக்கும் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்செயலுக்கு பான் கி மூன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். 

இன்று காலை காஸா நகரின் அல்குத்ஸ் மருத்துவமனை மீதும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது காஸா நகரின் மைய பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் பாலஸ்தீன் குழுக்களுக்கும் இடையே கடுமையான சன்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய தரப்பின் சேதம் குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. எனினும் நேற்றிலிருந்து இதுவரை சுமார் 33 இராணுவத்தினர் காயமுற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஹமாஸ் இயக்கத்தின் தகவல்படி 34 இராணுவத்தினர் கொல்லப் பட்டுள்ளனர். 96 பேர் காயமுற்றுள்ளனர்.

காஸாவிலிருந்து அருகிலுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீதான ராக்கெட் தாக்குதல் தொடர்ந்து கொண்டுள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!