Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

நீதிபதிகள் சம்பளம் மூன்று மடங்கு

Published on வியாழன், 15 ஜனவரி, 2009 1/15/2009 04:45:00 PM //

இந்திய நீதிபதிகளின் சம்பளங்களை மூன்று மடங்காக உயர்த்துவதற்கு இந்தி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த மாதம் இதற்கான சட்ட முன்வரைவை மத்திய சட்ட அமைச்சர் பாராளுமன்றத்தில் முன்வைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் அந்துலே பிரச்சனையால் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட வில்லை. பிறகு மத்திய அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்தது. அதற்கு ஜனாதிபதி கடந்த வாரம் ஒப்புதல் அளித்ததாக சட்டத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் இன்று கூறினார்.


நீதிபதிகளின் உயர்த்தப்பட்ட சம்பள விவரம் வருமாறு: அடைப்புக்குறிக்குள் இருப்பவை பழைய சம்பள விகிதம்.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி : ரூ. 1 இலட்சம் (33 ஆயிரம்)
உச்சநீதி மன்ற நீதிபதிகள் : ரூ. 90 ஆயிரம் (30 ஆயிரம்)
உயர் நீதி மன்ற தலைமை நீதிபதிகள் : ரூ. 90 ஆயிரம் (30 ஆயிரம்)
உயர் நீதி மன்ற நீதிபதிகள் : ரூ. 80 ஆயிரம் (26 ஆயிரம்)

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!