Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் - 40 பேர் பலி!

Published on வெள்ளி, 17 ஏப்ரல், 2009 4/17/2009 12:41:00 PM // , , , , ,

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில நடுக்கத்தில் குறைந்தது 40 பேர் பலியானார்கள். நூற்றுக் கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் எல்லைப் புறத்தில் உள்ள நங்கர்கர் மாகாணத்தில் கோக்யானி மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.5 பதிவானது. இதன் பிறகு 2 மணி நேரம் கழித்து 5.1 அளவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது.

முதலில் கிடைத்த தகவல்கள்படி இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். 60 பேர் காயமுற்றுள்ளனர்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!