Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் - 40 பேர் பலி!

Published on: வெள்ளி, 17 ஏப்ரல், 2009 // , , , , ,
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில நடுக்கத்தில் குறைந்தது 40 பேர் பலியானார்கள். நூற்றுக் கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் எல்லைப் புறத்தில் உள்ள நங்கர்கர் மாகாணத்தில் கோக்யானி மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.5 பதிவானது. இதன் பிறகு 2 மணி நேரம் கழித்து 5.1 அளவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது.

முதலில் கிடைத்த தகவல்கள்படி இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். 60 பேர் காயமுற்றுள்ளனர்.

இராஜஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: மூவர் காயம்

இன்று காலை ஏழு மணியளவில் இராஜஸ்தானின் ஜெய்சால்மீர், பாமர் பகுதிகளில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டேர் அளவீட்டில் 5.3 என்று பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீட்டின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டது. ஒரு பெண் உள்ளிட்ட மூவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

15 முதல் 20 விநாடிகளே இந்நிலநடுக்கம் இருந்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடங்களில் அரசின் கவனம் திருப்பப்பட்டுள்ளது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!