Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

கறுப்புப் பணம் 100 நாட்களில் இந்தியா கொண்டு வரப்படும் - அத்வானி!

Published on வெள்ளி, 17 ஏப்ரல், 2009 4/17/2009 11:55:00 AM // , , , , , , ,

தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் கறுப்புப் பணத்தை 100 நாட்களில் மீட்டு இந்தியாவிற்குக் கொண்டுவரப்படும் என்று அத்வானி கூறினார்.

இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அத்வாணி, சுவிஸ் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் எவ்வளவு உள்ளது, அதை எவ்வாறு இந்தியா கொண்டு வருவது என்பதை ஆய்வு செய்வதற்காக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் சிறப்பு அமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது என்று கூறினார்.

நான்கு உறுப்பினர்களைக் கொண்ட அந்த அமைப்பு தன்னுடைய இடைக்கால அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், சுவிஸ் வங்கி மட்டுமின்றி சுமார் 70 நாடுகளின் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் உள்ளதாகவும் அவர் கூறினார். இவ்வாறு முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் பணம் சுமார் 6.88 இலட்சம் கோடி ரூபாய் என்றும் அவர் கூறினார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!