Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 16, 2025

வங்கதேசம்: இராணுவப்புரட்சிக்கு பாகிஸ்தான் தூண்டல்?

Published on ஞாயிறு, 1 மார்ச், 2009 3/01/2009 10:01:00 PM // , , , , , ,

வங்காளதேசத்தில் அண்மையில் துணை இராணுவமான எல்லைப் பாதுகாப்பு படையினர் திடீர் புரட்சியில் ஈடுபட்டு ஏராளமான அதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் சுட்டுக்கொன்றனர். இதில் 200 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புரட்சியில் ஈடுபட்ட அத்தனை பேரும் ஆயுதங்களை கீழே போட்டு சரண் அடைந்து விட்டாலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டதுடன் புரட்சிகாரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும் அறிவித்திருந்தார். விசாரணையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் திட்டமிட்டு புரட்சி செய்து இருப்பதும் பின்னணியில் சலாலுதீன் செளத்ரி என்ற தொழில் அதிபர் இருந்ததும் தெரிய வந்துள்ளது. சலாலுதீன் செளத்ரி சிட்டாகாங் நகரை சேர்ந்த கப்பல் நிறுவன அதிபர்.

முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு நெருக்கமான இவருக்கு பாகிஸ்தான் உளவுப்படையான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆக, சலாலுதீன் சவுத்திரி பாகிஸ்தான் மற்றும் கலீதா ஜியாவின் தூண்டு தலால் இந்த சதி திட்டத்தை நிறைவேற்றி இருப்பதாக கூறப்படுகிறது

துணை இராணுவப்படை மூலம் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொன்று விட்டு ஆட்சியை கைப்பற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் திட்டமிட்டு தொடர்பாக முழுமையான விசாரணை நடந்து வருகிறது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!