Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஹைதராபாத்: சோனியாகாந்தி கூட்டத்தில் ரகளை

Published on ஞாயிறு, 1 மார்ச், 2009 3/01/2009 09:54:00 PM // , , , , , , ,

நேற்று ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி கலந்து கொண்டார். மாதிகா ரிசர்வேஷன் போராட்ட சமிதி (அருந்ததியர் இட ஒதுக்கீட்டு போராட்டக்குழு) என்ற அமைப்பினர் தங்கள் இனத்தவரை தாழ்த்தப்பட்டோராக வகைப்படுத்தியதில் காங்கிரஸ் அரசு ஏமாற்றிவிட்டதாகக் கூறி ரகளையில் ஈடுபட்டனர்.

உடனடியாக காவல்துறை தலையிட்டு அந்த அமைப்பினரை வெளியேற்றினார்கள். இதைத் தொடர்ந்து இந்த அமைப்பின் மற்றொரு கோஷ்டியினர் மீண்டும் அங்கு வந்து ரகளையில் ஈடுபட்டனர். அந்த அமைப்பினருக்கும் காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். நாற்காலிகள் உடைக்கப்பட்டன.
காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தன

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!