Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 13, 2025

40 கார்களின் இசைக்கருவிகள் திருட்டு!

Published on திங்கள், 2 மார்ச், 2009 3/02/2009 02:46:00 AM // , , , , ,

டில்லியில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 கார்களில் இருந்த இசைக்கருவிகள் திருடப்பட்டுள்ளன. டில்லியின் மயூர் விஹார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 40 கார்களின் கண்ணாடிகளை உடைத்து திருடப்பட்டுள்ளதாக டில்லி காவல்துறை கூறியுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை ஒரு காரின் டிரைவர் சாவியை உரிமையாளரிடமிருந்து வாங்கி காரின் அருகே சென்று பார்த்தபோது அந்தக் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இசைக் கருவி திருடப்பட்டிருப்பதை அறிந்து காரின் உரிமையாளரிடம் சென்று கூறினார். உரிமையாளர் தன்னுடைய காரைப் பார்த்துவிட்டு அருகிலிருந்த கார்களைப் பார்த்தபோது, அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த 40 கார்களின் கண்ணாடிகளையும் உடைத்து இசைக்கருவிகள் திருடப்பட்டிருந்ததை அடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!