Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

புலிகள் சரணடைய வேண்டும் என சர்வதேச குழு வலியுறுத்தல்!

Published on புதன், 4 பிப்ரவரி, 2009 2/04/2009 08:07:00 AM // , , , , , , ,

இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள வேளையில், அமெரிக்கா தலைமையிலான சர்வதேசக் குழு புலிகளை சரணடையும்படி வலியுறுத்தியுள்ளது. இந்தக் குழுவில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நார்வே ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

புலிகளுக்கு மிகக்குறைவான கால அவகாசமே இருக்கிறது என்பதால் இரு தரப்பிலும் ஏற்படும் வீணான உயிர்ச்சேதங்களை தவிர்ப்பதற்காக புலிகள் சரணடைவதே சிறந்தது என அக்குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கை அரசாங்கத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவது தொடர்பான பேச்சு வார்த்தைகளை புலிகள் தரப்பு விரைவில் தொடங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இந்த அறிக்கைக்கு புலிகள் தரப்பிலிருந்து இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!