Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 13, 2025

அஹமதாபாத் தொடர்குண்டு வெடிப்பு: மேலும் 5 குற்றப் பத்திரிகை

Published on புதன், 4 பிப்ரவரி, 2009 2/04/2009 03:06:00 AM // , , , , , ,

கடந்த ஆண்டு 57 பேரை பலிவாங்கிய அஹமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் 5 குற்றப் பத்திரிகையை காவல் துறை தாக்கல் செய்தது.


சர்கேஜ், மணிநகர் (2 வழக்குகள்), கலுப்பூர், வாத்வா ஆகிய பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக குற்றப் பிரிவு காவல்துறை இந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

கடந்த ஆண்டு ஜூலை 26 அன்று நகரின் பல்வேறு பகுதிகளிலும் 21 குண்டுகள் வெடித்தன. குற்றப் பிரிவு ஒவ்வொரு குண்டு வெடிப்பையும் தனி வழக்குகளாகப் பதிவு செய்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக குற்றப்பிரிவு காவல்துறையினர் கூறினர்.

சர்கேஜ் குண்டு வெடிப்பில் 54 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 47 பேர் தலைமறைவாக உள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. மணி நகர் குண்டு வெடிப்பில் 44 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 48 பேர் தலைமறைவாக உள்ளனர். வாத்வா மற்றும் கலுப்பூர் குண்டு வெடிப்புகளில் 43 பேர் குற்றவாளிகள் எனவும் 45 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் குற்றப் பத்திரிகையில் கூறப் பட்டுள்ளது.

ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட இக்குற்றப் பத்திரிகை ஒவ்வொன்றும் இந்தியன் முஜாஹிதீன் மற்றும் சிமி அமைப்பினர்தான் தொடர் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று கூறுகிறது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!