Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 16, 2025

ரன்வீர் சேனாவுக்கு உடந்தை என்ற குற்றச்சாட்டில் இரு பத்திரிகையளார்கள்

Published on புதன், 4 பிப்ரவரி, 2009 2/04/2009 09:43:00 PM // , , , , ,

இந்து தீவிரவாத அமைப்புக்கு உதவியதாக இரு பத்திரிகையாளர்கள் உள்பட நால்வரை கைது செய்துள்ளதாக நேபாள காவல்துறை இன்று அறிவித்தது.


ரிஷி தமலா மற்றும் பிரேந்திர குமார் மகாட்டோ என்ற இந்த பத்திரிகையாளர்கள் ஆயுதம் ஏந்திய இந்து தீவிரவாத அமைப்பான ரன்வீர் சேனாவுக்கு உதவி செய்ததாக காவல்துறை கூறுகிறது. ரிஷி தமலா நேபாள நிருபர்கள் சங்கத்தின் தலைவர் ஆவார். பிரேந்திர குமார் தனியார் வானொலி செய்தியாளர் ஆவார்.

கடந்த ஆண்டு காட்மண்டுவில் நடந்த மூன்று குண்டு வெடிப்புகளுக்கு ரன்வீர் சேனா பொறுப்பேற்றுக் கொண்டது. அதற்கு முன்வரை இத்தகைய அமைப்பு குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.

இந்த அமைப்பு கடந்த ஆண்டு திரிபுவன் பன்னாட்டு விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில், காட்மண்டு மால் என்ற வணிக வளாகம் முன் மற்றும் தர்பார் உயர்நிலைப் பள்ளி ஆகிய மூன்று இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்தது என்று காவல்துறை உயர் அதிகாரி ரமேஷ் குமார் கூறினார்.

கைது செய்யப்பட்ட மற்ற இருவர் ரன்வீர் சேனாவின் உறுப்பினர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!