Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 21, 2025

இந்தியா - பாகிஸ்தான் தீவிரவாதப் பிரச்சனையில் காமன்வெல்த் தலையிடாது!

Published on திங்கள், 9 பிப்ரவரி, 2009 2/09/2009 08:54:00 PM // , , , , , , , , ,

மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையில் காமன்வெல்த் அமைப்புத் தலையிடாது என்று கூறப்படுகிறது.


இந்தியா பாகிஸ்தானிடையே தீவிரவாதம் குறித்த பிரச்சனையில் காமன்வெல்த் தலையிடாது என்று அந்த அமைப்பின் செயலாளராக இருக்கும் இந்தியரான கமலேஷ் ஷர்மா கூறி உள்ளார்.

தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு காமன்வெல்த் அமைப்பு தனியான ஒரு திட்டத்தை வைத்திருக்கிறது. அதனை உறுப்பு நாடுகள் பலவும் ஏற்றுக் கொண்டுள்ளன. தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகளில் பாகிஸ்தானும் பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!