Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கோத்ரா வழக்கு: 5 நாட்கள் சிறப்பு விசாரணைக்குழு கட்டுப்பாட்டில் டி.எஸ்.பி.

Published on திங்கள், 9 பிப்ரவரி, 2009 2/09/2009 08:41:00 PM // , , , , , , ,

2002 ஆம் ஆண்டு கோத்ராவில் நடைபெற்ற கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட வல்சாத் காவல்துறை துணை கண்கானிப்பாளர் கே.ஜி. எர்தாவிடம் விசாரணை செய்வதற்காக 5 நாட்கள் சிறப்பு விசாரணைக் குழுவின் (SIT) கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


சிறப்பு விசாரணைக் குழு தாங்கள் இதுவரை திரட்டிய தகவல்களை மாநாகர நீதிபதி சி.பி. பட்டேலிடம் அளித்து எர்தாவை விசாரணைக்காக ஒப்படைக்கோரினர். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த அனுமதியை அளித்துள்ளார்.

இந்த கலவரம் நடைபெறம்போது அவர் மெகாநிகர் பகுதியில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றினார். இவர் கடமையிலிருந்து தவறியதாகவும் ஆதாரங்களை அழித்ததாகவும் இவர் மீது இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 302 (கொலை) மற்றும் 307 (கொலை முயற்சி) உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!