Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

திருச்செந்தூர்-சென்னைக்கு புதிய

Published on ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009 2/08/2009 06:22:00 PM // , , ,

திருச்செந்தூருக்கும் சென்னைக்கும் இடையே புதிய விரைவு தொடர்வண்டி இயக்கப்படுகிறது.

இதற்கான தொடக்கவிழா இன்று மாலை திருச்செந்தூரில் நடைபெறுகிறது. நடுவண் தொடர்வண்டித்துறை அமைச்சர் லாலுபிரசாத்யாதவ் கொடியசைத்து ஓட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

விழாவில் நடுவண் உள்துறை இணையமைச்சர் இராதிகா செல்வி, தமிழக அமைச்சர்கள் டி.பி.எம்.மைதீன்கான், கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடிஆதித்தன், சட்டமன்ற உறுப்பினர் இராணி வெங்கடேசன், நெல்லை நகர மேயர் ஏ.எல்.சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

செந்தூர்விரைவுவண்டி என்று பெயரிடப்பட்டுள்ள இத்தொடர்வண்டி (எண் 6736) வியாழன் தோறும் இரவு 7.15க்கு திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை சென்னையை அடையும். மறுமார்க்கமாக வெள்ளி பிற்பகல் 03:40க்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை திருச்செந்தூரை அடையும் என்று தென்னக இரயில்வே குறிப்பொன்று தெரிவிக்கிறது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!