Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

"போரை நிறுத்துங்கள்" - இந்திய அரசு கோரிக்கை

Published on வெள்ளி, 6 பிப்ரவரி, 2009 2/06/2009 12:13:00 AM // , , , ,

நேற்று காலை அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,


இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து இந்திய அரசு கவலை கொண்டிருக்கிறது. இலங்கை அரசு வினோதப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். அதேபோல விடுதலைப் புலிகளும் தங்களது தாக்குதலை நிறுத்த வேண்டும். இரு தரப்பும் இந்தியாவின் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

இந்தியா தனது செல்வாக்கினால், 48 மணி நேர போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவிக்கும் படிச் செய்தும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை. தற்போது மீண்டும் ராணுவ நடவடிக்கை தொடங்கியுள்ளது. இன்னும் கூட புலிகளிடமிருந்து பதில் இல்லை. இலங்கை அரசு தனது தாக்குதலை நிறுத்த வேண்டும்.
இரு தரப்பும் போரை நிறுத்தி விட்டுப் பேச முன்வர வேண்டும். இரு கைகளும் சேர்ந்தே ஓசை எழுப்ப முடியும். உயிர்கள் அநியாயமாக பறிபோவது மனதுக்கு வேதனையாக உள்ளது. எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை இந்திய அரசு நிச்சயம் செய்யும்
என்று கூறியுள்ளார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!