Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

"இலங்கை அரசு மீது வழக்கு" - தா. பாண்டியன்

Published on வெள்ளி, 6 பிப்ரவரி, 2009 2/06/2009 12:01:00 AM // , ,

பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசுக்கெதிராக இனப்படுகொலை வழக்கு தொடர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்து அறிவித்துள்ளது.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் இலங்கைக்கு நேரில் சென்று பார்வையிடவும் அங்கு உடனடியாக போரை நிறுத்த இலங்கை அரசை வலியுறுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

"இலங்கையில் போ‌ர் நிறுத்த‌ம் செ‌ய்த பின்னரே அரசியல் தீர்வு குறித்து பேச வேண்டும்" என்றார் அவர்.

"இலங்கைப் பிரச்சனையில் த‌மிழக அரசு இதுவரை எடு‌த்த முடிவுகள் எதுவும் பலனளிக்கவில்லை. இலங்கைப் பிரச்சினைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று கூறிய முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தற்போது பதவி விலக மறுக்கின்றார். பன்னாட்டு நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடரலாம் எ‌ன்று அறிவிக்கப்பட்டு‌ள்ளதா‌ல் மனித உரிமைக் கழக வழக்கறிஞர்கள் மூலம் இலங்கைப் பிரச்சினை குறித்து அங்கு வழக்கு தொடரப்படும் ".

ஆயினும், 'எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன் வைக்கமாட்டோம். இலங்கை பிரச்சினைக்காக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல". என்றார் தா.பா

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!