Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஒரே குடும்பத்தில் 8 பேர் படுகொலை!

Published on புதன், 11 பிப்ரவரி, 2009 2/11/2009 10:27:00 PM // , , , ,

பீகார் மாநிலம் பகல்பூரில் ஒரே குடும்பத்தில் 8 நபர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பணக்கார குடும்பத்திலுள்ள பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இளைஞனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தனர்.

21 வயது ரத்தன் சிங், 18 வயது காஞ்சன் குமாரியைக் காதலித்து வந்தார். இரு குடும்பங்களிலும் ஆண்டுகணக்கில் பரம்பரை பகை இருந்து வந்துள்ளது. குடும்பத்தாரின் சம்மதம் கிடைக்காது என்பதை உணர்ந்த இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டனர்.

சமாதானம் பேசலாம் என ரத்தன் சிங்கின் குடும்பத்தினரை அழைத்துக் கொடூரமாக கொலை செய்தனர் காஞ்சன் குமாரியின் வீட்டினர். இது தொடர்பாக 15 நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!