Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பத்திரிகை ஆசிரியர், வெளியீட்டாளர் கைது!

Published on புதன், 11 பிப்ரவரி, 2009 2/11/2009 07:01:00 PM // , , , , ,

கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் பிரபல நாளிதழான தி ஸ்டேட்ஸ்மேன் (The Statesman) நாளிதழின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் இன்று கைது செய்யப் பட்டனர்.


குறிப்பிட்ட ஒரு மதத்தினர் நம்பிக்கைகளைத் தாக்கும் விதமாக எழுதியதாக ஆங்காங்கே நடந்த ஆர்ப்பாட்டத்தினை அடுத்து இந்த நாளிதழின் ஆசிரியர் ரவீந்திர குமார் மற்றும் வெளியீட்டாளர் ஆனந்த் சின்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை இணை ஆய்வாளர் பிரதீப் சட்டர்ஜி கூறினார்.

முகமது சகீது என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும், இந்திய குற்றவியல் சட்டம் 295A மற்றும் 34 ஆகியவற்றின் அடிப்படையில் புகார் அளிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் கொல்கத்தா மாநகர தலைமை மாஜிஸ்ட்ரேட் ஆனந்து முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். ரூ. 5000 பிணைத் தொகையின் பேரில் அவர்கள் இருவரும் பிணையில் விடப்பட்டனர்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!