Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 08, 2025

நக்சல் நடமாட்டப் பகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு - ஒரு

நக்சல் இயக்கத்தினரின் நடமாட்டம் அதிகமுள்ள ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா மாநிலங்களில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவு மாலை 3 மணியுடன் முடிவுக்கு வந்தது.மதியம் 1 மணி அளவில் சட்டீஸ்கர் மாநிலத்தில் 25 சதவீத வாக்குகளே பதிவு செய்யப் பட்டிருந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் மதியம் 12 மணி வரை 28.5 சதவீத வாக்குகள் பதிவ செய்யப் பட்டிருந்தன. ஒரிசாவில் மதியம் 1.30 மணி அளவில்...

அத்வானி மீது ஷூ வீச்சு!

பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அத்வானி மீது இன்று ஷூ வீசப்பட்டது.மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது அத்வானியை நோக்கி ஒருவர் ஷூவை வீசினார். காவல் துறையினர் அவரை உடனடியாக கைது செய்து செய்தனர். கட்னி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த பவாஸ் அகர்வால்தான் ஷூ வீசினார் என்று கூறப்படுகிறது. கட்சியில் நிலவிய...

அசாம் : தேர்தல் அதிகாரி தற்கொலை முயற்சி!

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள ஹவுராகட் எனும் இடத்தில் வாக்குச்சாவடி அருகே, வாக்குப் பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் தேர்தல் அதிகாரி ஒருவர் தன்னுடை தொண்டையை பிளேடால் அறுத்துக் கொண்டார். அந்த அதிகாரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது தற்கொலை முயற்சிக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.இதே மாவட்டத்தில் மற்றொரு வாக்குச் சாவடி...

வாக்குப் பதிவின் போது மாவோயிஸ்டுகள் தாக்குதல் 11பேர் பலி!

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பீகார், ஜார்கண்ட், ஒரிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியானார்கள். இவர்களில் 9 பேர் காவல்துறையினர் என்று தகவல்கள் கூறுகின்றன.ஜார்கண்ட் மாநிலத்தின் லேடேஹர் மாவட்டத்தில் கன்னிவெடிகளை வெடிக்கச் செய்தபோது, வாக்குச்சாவடியின் பாதுகாப்புக்காக அவ்வழியே சென்று கொண்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையைச் சார்ந்த 7 பேர் கொல்லப் பட்டனர். அவர்கள் சென்ற வாகனத்தை ஓட்டிச் சென்ற...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!