Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

நக்சல் நடமாட்டப் பகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு - ஒரு

நக்சல் இயக்கத்தினரின் நடமாட்டம் அதிகமுள்ள ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா மாநிலங்களில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவு மாலை 3 மணியுடன் முடிவுக்கு வந்தது.

மதியம் 1 மணி அளவில் சட்டீஸ்கர் மாநிலத்தில் 25 சதவீத வாக்குகளே பதிவு செய்யப் பட்டிருந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் மதியம் 12 மணி வரை 28.5 சதவீத வாக்குகள் பதிவ செய்யப் பட்டிருந்தன. ஒரிசாவில் மதியம் 1.30 மணி அளவில் 40 சதவீத வாக்குகளும் ஆந்திராவில் 25.67 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

மகாராஷ்டிரா மாநிலம் ராஜனன்ட்காவ்ன் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். ஜாமுஇ மாவட்டத்தில் கன்னி வெடியை வெடிக்கச் செய்தனர்.

பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற வன்முறைகளில் 9 பாதுகாப்பு அதிகாரிகள், இரு பொதுமக்கள் உள்பட 16 பேர் கொல்லப் பட்டனர்.

பல்வேறு இடங்களில் கன்னிவெடிகள் வெடிக்கச் செய்யப்பட்டன. லடேகர் மாவட்டத்தில் 4 தேர்தல் அதிகாரிகளை நக்சல்கள் கடத்திச் சென்றுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பீகாரில் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். இரு பெண்கள் உள்பட ஆறுபேர் காயமுற்றனர். மத்திய ரிசர்வ் போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. கோடாபனூர் மற்றும் நராயண்பூர் ஆகிய இடங்களில் வாக்குச் சாவடிகளில் குண்டுகள் வெடித்தன.

ஒரிசாவில் மல்காங்கிரி மாவட்டத்தில் வாக்கு இயந்திரங்கள் எரியூட்டப்பட்டன. வாக்குச் சாவடிகள் மீதும் தாக்குதல் நடைபெற்றன.

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் தங்கும் விடுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!