Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

அசாம் : தேர்தல் அதிகாரி தற்கொலை முயற்சி!

Published on வியாழன், 16 ஏப்ரல், 2009 4/16/2009 01:25:00 PM // , , , , ,

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள ஹவுராகட் எனும் இடத்தில் வாக்குச்சாவடி அருகே, வாக்குப் பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் தேர்தல் அதிகாரி ஒருவர் தன்னுடை தொண்டையை பிளேடால் அறுத்துக் கொண்டார். அந்த அதிகாரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது தற்கொலை முயற்சிக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதே மாவட்டத்தில் மற்றொரு வாக்குச் சாவடி அருகே வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டு, செயலிழக்கச் செய்யப் பட்டது. மேலும் சில இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு கண்டுபிடிக்கப் பட்டு சரி செய்யப்பட்டன.

சிறுசிறு சம்பவங்களைத் தவிர்த்து அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நண்பகல் வரை அசாமில் 40 முதல் 50 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல்கள் கூறுகின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!