Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கியதில் ரூ.900கோடி ஊழல்?

இந்திய இராணுவத்துக்காக இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் புதியதிட்டம் பற்றிய செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், இந்திய ராணுவத்துக்காக ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரூ. 600 கோடி முதல் ரூ. 900 கோடி வரை ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சுரேஷ்நந்தா முன்னாள் இந்திய கடற்படை தளபதி எஸ்.எம்.நந்தாவின் மகன்...

சிதம்பரம்: திருமாவுக்கு எதிராக பா.ம.க நடப்பு எம்.பி

சிதம்பரம்: திருமாவுக்கு எதிராக பா.ம.க நடப்பு எம்.பிதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம்(தனி), விழுப்புரம்(தனி) தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழர்பாதுகாப்பு இயக்கம் என்று அவர்களுடன் தேர்தலுக்கு முன்புவரை தோழமை காட்டிவந்த பா.ம.க. எதிரணியான அதிமுகவில் இடம்பெற்றுவிட இவ்விரு கட்சிகளும் சிதம்பரத்தில் மோதிக்கொள்ளுமா என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தபடியே பா.ம.க-வுக்கு அதிமுக ஒதுக்கிய தொகுதிகளில் சிதம்பரம்(தனி)யும் இடம்பெற்றது. இதை அறிந்த திருமா பாமகவுடன் மோதலைத் தவிர்க்கும் பொருட்டு...

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தார் ஜஸ்வந்த்சிங், வீடியோ!

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜஸ்வந்த்சிங் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் காட்சி இதோ:- ...

பா.ஜ.க. பிரிவினைவாதஅரசியலை விதைக்கிறது : ராகுல்

பாரதீய ஜனதா கட்சி பிரிவிணைவாத அரசியலை விதைக்கிறது என்று அக்கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தினார். மும்பை தாக்குதல் சம்பவத்தை பா.ஜ.க. தேர்தல் பிரச்சனையாக ஆக்குவதை எதிர்த்து இவ்வாறு அவர் கூறினார். "இந்த நாடு முழுவதையும் நாங்கள் (காங்கிரஸ்) ஒரே நாடாகக் கருதுகிறோம். இந்த நாட்டின் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் எங்கள் எதிர்கட்சிகள் நாட்டைப் பிளவுபடுத்தும்...

மன்மோகன் சிங்தான் எங்கள் பிரதமர் வேட்பாளர் : சமாஜ்வாதி

தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் மன்மோகன் சிங்தான் என்று சமாஜ்வாதி கட்சி கூறி உள்ளது. டெல்லியின் செய்தியாளர்களுடன் பேசிய சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் காங்கிரசுடன் தங்கள் கட்சிக்கு தகராறு எதுவும் இல்லை எனவும், மன்மோகன் சிங்கையே மீண்டும் பிரதமராக்க விரும்புகிறோம் என்றும் கூறினார்.உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுகின்றன. பீகாரில்...

வாக்காளர்களுக்கு பா.ஜ.க. தலைவர் பணம் கொடுத்தார்?

வாக்காளர்களுக்கு பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்டத் தலைவர் பணம் கொடுப்பது போன்ற காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங்கின் மகன் பார்மர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியபின் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த காட்சி வீடியோவில் பதிவாகி இருக்கிறது....

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!