Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

வாக்காளர்களுக்கு பா.ஜ.க. தலைவர் பணம் கொடுத்தார்?

Published on புதன், 1 ஏப்ரல், 2009 4/01/2009 02:39:00 AM // , , , , , , ,

வாக்காளர்களுக்கு பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்டத் தலைவர் பணம் கொடுப்பது போன்ற காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங்கின் மகன் பார்மர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியபின் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த காட்சி வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதனை தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. ஜஸ்வந்த் சிங்குடன் பா.ஜ.க. தேசிய துணைத் தலைவர் கைலாஷ் மேக்வால் என்பவரும் இதில் இடம் பெற்றுள்ளார். தேர்தல் பேரணி்யில் கலந்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடன் வந்தவரிடம் பணம் கொடுப்பது போன்று காட்சி அமைந்துள்ளது.

இது குறித்து தாசில்தார் அறிக்கை அளித்துள்ளதாகவும், அந்த அறிக்கையை ஆராய்ந்து வருவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் நடிகர் கோவிந்தா ஆகியோர் மீதும் ஏற்கனவே இத்தகைய புகார்கள் எழுந்துள்ளன.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!