Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கியதில் ரூ.900கோடி ஊழல்?

இந்திய இராணுவத்துக்காக இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் புதியதிட்டம் பற்றிய செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், இந்திய ராணுவத்துக்காக ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரூ. 600 கோடி முதல் ரூ. 900 கோடி வரை ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ்நந்தா முன்னாள் இந்திய கடற்படை தளபதி எஸ்.எம்.நந்தாவின் மகன் ஆவார். இவர் 1971-ல் நடந்த போரில் கடற்படை தளபதியாக இருந்தார். ஆயுத முகவர்களாக செயற்பட்டு வருகிற கதிர்சவுத்ரி, சுரேஷ்நந்தா ஆகியோரிடம் ம.பு.து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இன்னொரு முகவர் கதிர், அவரது சகோதரர் அசில் ஆகியோர் இந்தியாவிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுத விநியோகிகளாக உள்ளனர். இவர்கள் உருஷியா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆயுத நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளனர். முகவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களுக்கும், அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. விரைவில் இந்த ஊழல் தொடர்பாக முக்கிய தலைவர்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!