Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பா.ஜ.க. பிரிவினைவாதஅரசியலை விதைக்கிறது : ராகுல் காந்தி

பாரதீய ஜனதா கட்சி பிரிவிணைவாத அரசியலை விதைக்கிறது என்று அக்கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தினார். மும்பை தாக்குதல் சம்பவத்தை பா.ஜ.க. தேர்தல் பிரச்சனையாக ஆக்குவதை எதிர்த்து இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த நாடு முழுவதையும் நாங்கள் (காங்கிரஸ்) ஒரே நாடாகக் கருதுகிறோம். இந்த நாட்டின் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் எங்கள் எதிர்கட்சிகள் நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியலை விதைக்கின்றனர்" என்று ராகுல் காந்தி கூறினார்.

"சில கட்சிகள் மத அரசியல் செய்கின்றன. சில கட்சிகள் ஜாதி அரசியல் செய்கின்றன. மேலும் எங்களுக்கும் மற்ற எதிர்கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் நாங்கள் இந்தியாவை பொதுமக்களின் பார்வை வழியாகப் பார்க்கிறோம்" என்றும் அவர் கூறினார்.

அவர்கள் இப்போது தீவிரவாதம் குறித்து பேசுகின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது இது குறித்து எதுவும் பேசவில்லை. நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்த போது, ஒரு அமைச்சர் காந்தகார் சென்று தீவிரவாதி ஒருவரை விடுவித்து விட்டு வந்தார் என்று ராகுல் கூறினார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!