Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 08, 2025

தாய்லாந்தில் அரசியல் குழப்பம்

Published on: ஞாயிறு, 22 மார்ச், 2009 // ,

ஓர் ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வரும் உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளினால், அந்நாட்டில் அரசியல் குழப்பம் தொடர்கிறது. முன்னாள் பிரதமர், தக்ஸின் சினவத்ரா, நாட்டை விட்டு வெளியேறினாலும், அவருடைய கட்சிக்காரர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் விமான நிலைய முற்றுகை என பல்வேறு போராட்டங்களை அரசுக்கெதிராக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியான, பேங்காக், பயணிகளின் வருகை குறைவால்,...

வெற்றியை நோக்கி தென். ஆப்ரிக்கா !

கேப் டவுன் நகரில் நடந்து வரும் மூன்றாம் மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முன்னனி வீரர்களை இழந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனினும், அதன் கடைநிலை ஆட்டக்காரர்கள் தென் ஆப்ரிக்காவின் வெற்றியை தாமதப்படுத்தும் போக்கில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். சற்று முன்வறை, ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 326 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. ...

கிருஷ்ணகிரியில் துப்பாக்கியுடன் இருவர்

அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக கிருஷ்ணகிரி காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி காவல் துறையினர் கூறுகையில், கிருஷ்ணகிரி பெரியகல்லுபள்ளி வனப்பகுதி அருகே காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு துப்பாக்கி சத்தம் கேட்டதால், அப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது வனப்பகுதிக்குள் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்திருந்த தேவராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி நரசிம்மாச்சாரி என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரிடமிருந்தும் துப்பாக்கிகள்...

93 திபெத்திய புத்த பிக்குகள் கைது!

திபெத்திய கிராமம் ஒன்றில் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி 93 திபபெத்திய புத்த பிக்குகளை சீன காவல்துறை கைது செய்துள்ளது.கின்ஹாய் மாநிலத்தில் லக்யாப் என்ற நகரில் சனிக்கிழமையன்று நூற்றுக்கும் அதிகமானவர்கள் நகரின் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக சீன செய்தி நிறுவனம் கூறுகிறது. இந்த தாக்குதலில் காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் காயமுற்றதாக சீன அதிகாரிகள் கூறியதாக அந்த தகவல் மேலும்...

கஷ்மீர் துப்பாக்கிச்சன்டையில் 10 பேர்

கஷ்மீரில் இராணுவத்தினருக்கும் பிரிவினைக் குழுக்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சன்டையில் ஒரு மேஜர் உட்பட 4 இராணுவத்தினரும், 6 பிரிவினைவாதிகளும் கொல்லப்பட்டதாக பாதுகாப்புச் செய்தியாளர் இன்று தெரிவித்தார்.குப்வாரா மாவட்டத்தின் ஹப்ரதா காடுகளில் பிரிவினைவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக இராணுவத்தினருக்குக் கிடைத்த தகவலை ஒட்டி நேற்று இந்த தாக்குதலை இராணுவம் தொடுத்து வருகிறது. ...

IPL போட்டிகள் தென் ஆப்ரிக்காவிற்கு

IPL போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடப்பது உறுதியாகிவிட்டது. இன்று BCCI யின் அவசரக் கூட்டம் மும்பையில் நடந்தது. மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில் போட்டிகள் நடைபெறுவதாக இருந்ததையொட்டி, போட்டிகளை தள்ளி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் BCCI யை கேட்டுக் கொண்டது. முதலில் போட்டிகள் ஒத்திவைப்பதாக கூறி வந்த BCCI, வியாபாரம் மற்றும் ஸ்பான்ஸர்களின் வேண்டுகோளுக்கிணங்க வேறு நாடுகளில் நடத்த ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனிடையே, இங்கிலாந்தும் போட்டிகளை...

பா.ம.க., தி.மு.க. அணிக்கு வரவேண்டும் -

பாமக திமுக அணிக்கு வரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பா.ம.க.வும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்கிற ஆவல் இரு கட்சிகளின் முன்னணி தலைவர்களுக்கிடையே மட்டுமின்றி பெரும்பான்மையான தொண்டர்களிடையேயும் மேலோங்கியுள்ளது. மொழி மற்றும் இனப்பாதுகாப்பு களங்களில் இருகட்சிகளும் தோழமையோடு பணியாற்றி வருகிறது. இதனால் சமூக நல்லிணக்க சூழல் வளர்ந்துள்ளது....

பா.ஜ.க. கோயில் கட்டுமான நிறுவனம் அல்ல :

பாரதீய ஜனதா கட்சி கோயில் கட்டுமான நிறுவனம் அல்ல என்று அதன் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.கோயில், மசூதி, தேவாலயம், குருத்வாரா போன்றவற்றைக் கட்டுவதற்கு பாரதீய ஜனதா கட்சி கட்டுமான நிறுவனம் ஒன்றும் அல்ல. அயோத்தியில் ராமர் கோயில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் அது, மதத்தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புக் கொள்ளப்பட்டதாகவோ அல்லது நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலோதான்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!