தமிழகம்: போக்கிரிகளை கண்டதும் சுட
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கும் யாரையும் கண்டதும் சுட தமிழக காவல்துறைத் தலைவர் ஆணையிட்டுள்ளார்.கடந்த வியாழனன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்-காவலர்களிடையே நடைபெற்ற கலவரத்தை காரணங்காட்டியும், ஈழத்தமிழர் பிரசினை என்ற உணர்ச்சிப் போர்வையிலும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கும் போக்கிரிகள் யாரையும் கண்டதும் சுடும்படி தமிழக காவல்துறைத் தலைவர் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் கடந்த இருநாள்களாக, நான்கு பேருந்துகள், நான்கு தீயணைப்பு வாகனங்கள், பதினான்கு இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. ...