Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கஷ்மீரில் இரு தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்

Published on: புதன், 28 ஜனவரி, 2009 // , , , ,
ஜம்மு கஷ்மீரில் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சன்டைகளில் அல் படர் தலைவர் உள்பட இரு தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர். ஒரு இராணுவ வீரர் பலியானார்.

நேற்று இரவு அமர்கர் எனும் கிராமத்தில் இராணுவத்தினர் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் இருந்த போது ஒரு வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகள் இராணுவத்தினரை நோக்கிச் சுட்டனர்.  பின்னர் துப்பாக்கிச் சன்டையை நிறுத்தியிருந்த இராணுவம் அதிகாலையில் மீண்டும் துவக்கிய போது அந்த வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதி கொல்லப்பட்டார். இதில் சோஹன் சிங் என்ற இராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். மற்றொரு வீரர் காயமுற்றார்.

கொல்லப்பட்ட தீவிரவாதி அல்படர் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான அபூ ஹம்சா ஆவார்.

நேற்று பகிஹாரா என்ற கிராமத்தில் நடந்த மற்றொரு சன்டையில் அடையாளம் தெரியாத தீவிரவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வடக்கு கஷ்மீரின் பன்டிபுரா மாவட்டத்திலும் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சன்டை நடந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி முடிவாகவில்லை - தேர்தல் ஆணையம்

இந்திய நாடாளுமன்றத்திற்கான தேதி இன்னும் முடிவு செய்யப் படவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 8 மற்றும் மே 15 ஆகிய நாள்களுக்கு இடையில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் குரேஷி கூறியதாக நேற்று தகவல்கள் வந்தன.

லண்டனில் உள்ள இந்தியா இல்லத்தில் நேற்று 'ஜம்மு காஷ்மீர் தேர்தல் 2008' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இந்திய தேர்தல் ஆணையர் குரேஷி, தேர்தல் தேதி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப் படவில்லை என்றும், ஏப்ரல் 8 மற்றும் மே 15 ஆகிய தேதிகளுக்குள் நடைபெறும் என்றும் கூறினார்.

14ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் மே மாதத்தில் முடிவடைகிறது. எனவே தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

கழிவறையில் தண்ணீரைப் பயன்படுத்திய ஊழியர் பணி நீக்கம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தொழில் நிறுவனம் ஒன்று தனது ஊழியர் கழிவறையில் காகிதத்திற்குப் பதில் தண்ணீரைப் பயன்படுத்தியதால் அவரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

43 வயதான பிலிப்பைனைச் சேர்ந்த அமடார் பெர்னாபே என்பவர் ஆஸ்திரேலியாவில் டவுன்ஸ்வில்லே இன்ஜினியரிங் இன்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனத்தில் இயந்திர கையாளுராகப் பணியாற்றி வருகிறார். இவர் கழிவறையில் காகிதத்திற்குப் பதில் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ததல் பணியிலிருந்து நீக்கப்பட்டார் என்று உள்ளூர் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டது.

அவர் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்று மறுத்த அந்நிறுவனத்தின் மேலாளர், அவருடைய செயல்கள் சுகாதார விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால் பல முறை அவரிடம் அவருடைய பழக்கத்தை மாற்றிக் கொள்ளுமாறு கூறப்பட்டாகத் தெரிவித்தார். அவருடைய செயல் கழிவறைப் பிரச்சனை மட்டுமல்ல. மற்ற பணியாளர்களின் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது என்றும் மேலாளர் கூறினார்.

ஓரே நாளில் 80 ஆயிரம் பேர் வேலையிழப்பு

ஒரே நாளில் 80 ஆயிரம் பேர் வேலையிழக்கப் போவதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களாக உலகப் பொருளாதாரம் பலத்த பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு மேற்கத்திய நிறுவனங்கள் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி வருகின்றன. திங்கள் கிழமை பல்வேறு நிறுவனங்களும் அறிவித்த ஆட்குறைப்பு உலகப் பொருளதார பாதிப்பை பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளது.

கட்டுமான இயந்திர தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமான கேட்டர்பில்லர் நிறுவனம் தன்னுடைய பணியாளர்களில் 20 ஆயிரம் பேரை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. பிஜர் என்ற மருந்து நிறுவனம் 26 ஆயிரம் பேரையும், சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஹோம் டிபோட் என்ற நிறுவனம் 7 ஆயிரம் பணியாளர்களையும், ஸ்பிரின்ட் நெக்ஸ்டெல் எனும் தொலைத் தொடர்பு நிறுவனம் 8 ஆயிரம் பேரையும் நீக்க முடிவு செய்துள்ளன.

ஐரோப்பிய நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு அறிவிப்புகளை செய்துள்ளன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!