Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

கஷ்மீரில் இரு தீவிரவாதிகள் கொல்லப்

Published on புதன், 28 ஜனவரி, 2009 1/28/2009 08:20:00 PM // , , , ,

ஜம்மு கஷ்மீரில் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சன்டைகளில் அல் படர் தலைவர் உள்பட இரு தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர். ஒரு இராணுவ வீரர் பலியானார்.


நேற்று இரவு அமர்கர் எனும் கிராமத்தில் இராணுவத்தினர் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் இருந்த போது ஒரு வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகள் இராணுவத்தினரை நோக்கிச் சுட்டனர்.  பின்னர் துப்பாக்கிச் சன்டையை நிறுத்தியிருந்த இராணுவம் அதிகாலையில் மீண்டும் துவக்கிய போது அந்த வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதி கொல்லப்பட்டார். இதில் சோஹன் சிங் என்ற இராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். மற்றொரு வீரர் காயமுற்றார்.

கொல்லப்பட்ட தீவிரவாதி அல்படர் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான அபூ ஹம்சா ஆவார்.

நேற்று பகிஹாரா என்ற கிராமத்தில் நடந்த மற்றொரு சன்டையில் அடையாளம் தெரியாத தீவிரவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வடக்கு கஷ்மீரின் பன்டிபுரா மாவட்டத்திலும் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சன்டை நடந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!