Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

கழிவறையில் தண்ணீரைப் பயன்படுத்திய ஊழியர் பணி

Published on புதன், 28 ஜனவரி, 2009 1/28/2009 01:14:00 PM // , , , ,

ஆஸ்திரேலியாவில் உள்ள தொழில் நிறுவனம் ஒன்று தனது ஊழியர் கழிவறையில் காகிதத்திற்குப் பதில் தண்ணீரைப் பயன்படுத்தியதால் அவரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


43 வயதான பிலிப்பைனைச் சேர்ந்த அமடார் பெர்னாபே என்பவர் ஆஸ்திரேலியாவில் டவுன்ஸ்வில்லே இன்ஜினியரிங் இன்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனத்தில் இயந்திர கையாளுராகப் பணியாற்றி வருகிறார். இவர் கழிவறையில் காகிதத்திற்குப் பதில் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ததல் பணியிலிருந்து நீக்கப்பட்டார் என்று உள்ளூர் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டது.

அவர் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்று மறுத்த அந்நிறுவனத்தின் மேலாளர், அவருடைய செயல்கள் சுகாதார விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால் பல முறை அவரிடம் அவருடைய பழக்கத்தை மாற்றிக் கொள்ளுமாறு கூறப்பட்டாகத் தெரிவித்தார். அவருடைய செயல் கழிவறைப் பிரச்சனை மட்டுமல்ல. மற்ற பணியாளர்களின் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது என்றும் மேலாளர் கூறினார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!