Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

ஓரே நாளில் 80 ஆயிரம் பேர்

Published on புதன், 28 ஜனவரி, 2009 1/28/2009 02:42:00 AM // , , , , ,

ஒரே நாளில் 80 ஆயிரம் பேர் வேலையிழக்கப் போவதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களாக உலகப் பொருளாதாரம் பலத்த பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு மேற்கத்திய நிறுவனங்கள் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி வருகின்றன. திங்கள் கிழமை பல்வேறு நிறுவனங்களும் அறிவித்த ஆட்குறைப்பு உலகப் பொருளதார பாதிப்பை பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளது.


கட்டுமான இயந்திர தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமான கேட்டர்பில்லர் நிறுவனம் தன்னுடைய பணியாளர்களில் 20 ஆயிரம் பேரை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. பிஜர் என்ற மருந்து நிறுவனம் 26 ஆயிரம் பேரையும், சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஹோம் டிபோட் என்ற நிறுவனம் 7 ஆயிரம் பணியாளர்களையும், ஸ்பிரின்ட் நெக்ஸ்டெல் எனும் தொலைத் தொடர்பு நிறுவனம் 8 ஆயிரம் பேரையும் நீக்க முடிவு செய்துள்ளன.

ஐரோப்பிய நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு அறிவிப்புகளை செய்துள்ளன.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!