Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தாழ்த்தப்பட்ட சாதி அமைச்சர் சென்ற கோயில் சுத்தம் செய்யப்பட்டது?

Published on: வெள்ளி, 16 ஜனவரி, 2009 // ,
ஒரிசாவில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த அமைச்சர் கோயிலுக்குச் சென்றதால் கோயில் சுத்தப்படுத்தப்பட்டது என்ற செய்தியைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரிசாவைச் சேர்ந்த அமைச்சர் பிரமிளா மல்லிக் என்ற அமைச்சர் இந்த வாரம் புகழ்பெற்ற கோயிலுக்குச் சென்று வந்த பின்னர், கோயிலின் கதவை மூடிவிட்டு தரைகள் கழுவிவிடப்பட்டன. சாமி சிலையின் துணிகள் மாற்றப்பட்டன. யாகம் நடத்தப்பட்டது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

கோயிலின் கருவறைக்குள் அமைச்சர் நுழைவதற்கு சில சாமியார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உபேந்திரா மல்லிக் என்னும் அரசு அதிகாரி கூறியதாக ராய்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மும்பை தாக்குதல் விசாரணை இந்தியாவில் நடக்க வேண்டும்

மும்பையில் நவம்பர் 26ஆம் நாளன்று நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விசாரணை பாகிஸ்தானில் நடத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால் விசாரணை இந்தியாவில்தான் நடத்த வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.

மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். தீவிரவாதத்திற்கெதிரான சார்க் அமைப்பின் மாநாட்டில் இப்படித்தான் தீர்மானிக்கப் பட்டுள்ளது. பன்னாட்டு அமைப்புகளும் இதுபோன்றே கூறுகின்றன என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தங்கள் எதுவும் செய்து கொள்ளவில்லை. என்றாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உலகின் பல்வேறு நாடுகளும் குற்றவாளிகளை ஒப்படைத்துள்ளன. எனவே பாகிஸ்தானும் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோருகிறது.

மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் 40 பேரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரி வருகிறது.

இஸ்ரேலை ஐ.நா.விலிருந்து விலக்க வேண்டும் - துருக்கி


ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை செயல்படுத்தாத ஒரு நாட்டை ஐ.நா. சபையின் தலைமையத்திற்குள் எவ்வாறு அனுமதிப்பது என்று துருக்கி பிரதமர் எர்தோகான் கேள்வி எழுப்பியுள்ளார். பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை செயல்படுத்தாத இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். ஹமாஸ் இயக்கத்தினரைத்தான் குறி வைத்து தாக்குகிறோம் என்ற பெயரில் பொதுமக்களை இஸ்ரேல் கொன்று குவிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் காஸா மீதான தாக்குதல் குறித்து துருக்கி பிரதமருடன் ஆலோசனை செய்ய உள்ள நிலையில் எர்தோகான் இவ்வாறு கூறியுள்ளார்.

துருக்கி ஜனாதிபதி அப்துல்லா குல் சன்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று மீண்டும் கோரியுள்ளார். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள பராக் ஒபாமா பொறுப்பேற்றவுடன் உடனடியாக பாலஸ்தீனப் பிரச்சனையில் தலையிட்டு நீண்ட கால தீர்வு காண வேண்டும் என்று கோரியுள்ளார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் இஸ்ரேலுடன் அதிக உறவு வைத்திருக்கும் நாடு துருக்கி என்பது குறிப்பிடத் தக்கது.

பறவை மோதி அமெரிக்க விமானம் ஆற்றில் கவிழ்ந்தது

Published on: //
அமெரிக்காவின் ஜெட்விமானம் எண் 1549 ஒன்று பறவை மோதி மன்ஹாட்டனின் புகழ்பெற்ற ஹட்சன் நதியில் கவிழ்ந்தது.

நேற்று மதியம் (15-01-2008), லாகார்டியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வு நடந்தது. 150 க்கும் மேற்பட்ட பயணிகளையும் விமான பணியாளர்களையும், நதியில் இருந்து மீட்டனர்.

வெறும் பறவைகள் ஒரு விமானத்தைக் தகர்க்கும் அளவுக்கு தொழில் நுட்பம் பலவீனமானதாக இருக்கிறதா என்ற ரீதியில் அமெரிக்கா முழுக்க விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளன.

இது தொடர்புடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இங்கே காணலாம்.



Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!