Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

மும்பை தாக்குதல் விசாரணை இந்தியாவில் நடக்க

Published on வெள்ளி, 16 ஜனவரி, 2009 1/16/2009 05:23:00 PM // ,

மும்பையில் நவம்பர் 26ஆம் நாளன்று நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விசாரணை பாகிஸ்தானில் நடத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால் விசாரணை இந்தியாவில்தான் நடத்த வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.


மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். தீவிரவாதத்திற்கெதிரான சார்க் அமைப்பின் மாநாட்டில் இப்படித்தான் தீர்மானிக்கப் பட்டுள்ளது. பன்னாட்டு அமைப்புகளும் இதுபோன்றே கூறுகின்றன என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தங்கள் எதுவும் செய்து கொள்ளவில்லை. என்றாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உலகின் பல்வேறு நாடுகளும் குற்றவாளிகளை ஒப்படைத்துள்ளன. எனவே பாகிஸ்தானும் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோருகிறது.

மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் 40 பேரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரி வருகிறது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!