Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

முதல் கட்ட வாக்குப் பதிவு: பீகாரில் கண்டதும் சுட உத்தரவு!

Published on புதன், 15 ஏப்ரல், 2009 4/15/2009 05:28:00 PM // , , , , ,

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை நடக்க இருக்கிறது. பீகார் மாநிலத்தின் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது. இந்தப் பகுதிகளில் கலவரக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மற்ற மாநில எல்லைகள் மற்றும் நேபாள எல்லை மூடப்பட்டுள்ளது.

மத்திய இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பா.ஜ.க.வின் ராஜீவ் பிரதாப் ரூடி, மத்திய அமைச்சார் மீரா குமார் போன்ற முக்கியப் பிரமுகர்களின் தொகுதிகளில் நாளை தேர்தல் நடக்க இருக்கிறது. சுமார் 1.75 கோடி வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதிகளில் 21 பெண்கள் உள்பட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கலவர சூழல் ஏற்பட்ட அதனைக் காவலர்களால் கட்டுப்படுத்த இயலாது என்ற நிலை உருவானால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது என்று பீகார் மாநில உள்துறைச் செயலாளர் அப்சல் அமானுல்லா கூறினார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!