Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஆந்திராவில் வாக்காளர்களைக் கவர கோழி பரிசு!

Published on புதன், 15 ஏப்ரல், 2009 4/15/2009 07:39:00 PM // , , , , ,

ஆந்திராவில் நடைபெற இருக்கும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் சாராயம் போன்றவற்றை வேட்பாளர்கள் வழங்குகின்றனர் என்ற புகார்களால் மாநில தேர்தல் ஆணையமும் காவல் துறையும் திண்டாடி வரும் நிலையில் வாக்காளர்களைக் கவர அவர்களுக்கு கோழிகள் இலவசமாக வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் கரீம் நகர் மாவட்டத்தின் நர்சிங்பூர் கிராமத்தில் கோழி பாக்கெட்டுகளை காவல்துறை கைப்பற்றி உள்ளது. 1 கிலோ கோழிகளைக் கொண்ட இப்பாக்கெட்டுகளை ஆளும் கட்சியான காங்கிரஸ் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு வழங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த இரு வாரங்களில் மட்டும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட வாகன சோதனைகளின் போது 25 கோடி ரூபாய்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. செவ்வாய் கிழமையன்று மட்டும் 1.26 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் சாராயம் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டமாகவும் தங்களின் தீவிரக் கண்கானிப்பினால் அவை தவிர்க்கப் பட்டு வருவதாகவும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சுப்பா ராவ் கூறினார்.

முதல்கட்டத் தேர்தல் நடைபெற இருக்கும் பகுதிகளில் காவல்துறை, வருமான வரித்துறை மற்றும் கலால் வரித்துறையினர் சுமார் 752 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்கானித்து வருகின்றனர்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!