Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சிதம்பரம் மீது காலணி வீசிய பத்திரிகையாளர் விடுவிப்பு

Published on செவ்வாய், 7 ஏப்ரல், 2009 4/07/2009 04:17:00 PM // , , , , , , ,

மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மீது காலணி வீசிய பத்திரிகையளாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பிறகு அவரை விடுவித்துள்ளனர். விசாரணை விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக டில்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த பயங்கரவாதம் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சீக்கிய கலவரம் குறித்த தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜர்னைல் சிங்கின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.


இதனால் கோபமடைந்த நிருபர் ஜர்னைல் சிங் தனது காலணியைக் கழட்டி ப.சிதம்பரத்தை நோக்கி எறிந்தார். ஆனால் காலணி சிதம்பரம் மீது படவில்லை.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!