Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

வருணுக்கு எதிரான பேச்சு : லாலு விளக்கம்

Published on செவ்வாய், 7 ஏப்ரல், 2009 4/07/2009 05:43:00 PM // , , , , , , ,

வருணுக்கு எதிராக லாலு பேசியதாக வெளியான தகவலை அடுத்து தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு லாலு விளக்கம் அளித்துள்ளார்.

தான் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பேன் என்பதைக் கூறவே அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதாக லாலு விளக்கம் அளித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் கர்வா எனும் இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் குரன் ராம் என்பவரை ஆதரித்துப் பேசிய போது இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.

அத்வானி ஒருபோதும் பிரதமராக முடியாது என்றும் இந்துத்துவா சக்திகள் பதவிக்கு வருவதைத் தடுக்கவே முலாயம் மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருடன் தாம் கூட்டணி அமைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக நேற்று பிகார் மாநிலம் கிஷண்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
பிலிபிட் மக்களவைத் தொகுதி பொதுக் கூட்டத்தில் முஸ்லிம்கள் கையை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்று பேசியிருக்கிறார் பாஜகவின் சின்னப் பையன் வருண் காந்தி.

பாஜக மூத்த தலைவர்கள் தரும் ஊக்கம் தான் இதற்குக் காரணம். நான் மட்டும் நான் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருவது வரட்டும் என்று வருண் காந்தியை அப்படியே ரோடு ரோலரை ஏற்றிக் கொன்றிருப்பேன் என்று பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!